தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு – கல்வித்துறை திட்டம்!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மே மாதம் நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு:
தமிழகத்தில் உள்ள 37,498 அரசு பள்ளிகளில் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு வழக்கமாக மே மாத இறுதியில் நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த கலந்தாய்வுகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் 10 மாதங்களுக்கு பின்னர் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
அதனால் அரசு ஊழியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல் பதவி உயர்வு கலந்தாய்வு பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு முடிவில் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தல் பணிகள் காரணமாக மே மாதம் சட்டமன்ற தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் நடத்தப்படும் என கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அரியரில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா – சென்னை பல்கலை அறிவிப்பு!!
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும். மேலும் இந்த கலந்தாய்வுக்கான தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தெரிவிக்கப்படும்,” இவ்வாறு தெரிவித்தனர்.