அரியரில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா – சென்னை பல்கலை அறிவிப்பு!!
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளில் அரியர் தேர்வுகளை ரத்து செய்தது குறித்து தமிழக அரசு, பல்கலைக்கழக மானிய குழுவுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் அரியரில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியர் தேர்வுகள்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த அறிவிப்பு பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகளுக்கு புறம்பானது எனவும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கட்டாயம் தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு அரியர் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டது குறித்தும், அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் குறித்தும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 8) முதல் பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
இந்த வழக்கில் தமிழக அரசும், பல்கலைக்கழக மாநில குழுவும் கலந்து ஆலோசனை நடத்தப்பட வேண்டும் எனவும், இதுகுறித்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு அரியர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.