கொரோனா பாதித்தவர்கள் வசிக்கும் தெருக்கள் மூடல் – மாநகராட்சி அறிவிப்பு!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மிக வேகமாக கொரோனா நோய்த்தொற்று பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக மதுரையில் மிக தீவிரமாக கொரோனா பரவி வருகிறது. தற்போது இதன் எதிரொலியாக மதுரையில் 20 தெருக்கள் மூடப்பட்டுள்ளது.
தீவிரமாகும் கொரோனா:
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனாவின் 2வது அலை மிக வேகமாக வீசி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மக்கள் அனைவரையும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இன்று இது குறித்து நாட்டின் பிரதமர் மோடி மாநில/யூனியன் பிரதேச முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
TN Job “FB Group” Join Now
தற்போது தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று மட்டும் மதுரையில் சுமார் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் 58 பேர் மதுரை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,364 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
தமிழக பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
அதன் பின்னர் அவர் கூறியதாவது, மதுரையில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் கேர் சென்டர்களை மீண்டும் துவங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் படி மதுரை மாநகராட்சியில் அதிகமாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 20 தெருக்கள் தற்போது மூடப்பட்டுள்ளது. அந்த தெருக்களில் இருந்து வெளியே, உள்ளே யாரும் செல்ல முடியாது. இன்று முதல் கொரோனா பாதித்தவர்கள் வசிக்கும் தெருக்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.