தமிழக பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
பொறியியல் கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களது அங்கீகாரத்தை நீட்டித்து வரும். தற்போது அந்த வகையில் இந்த ஆண்டிற்கான அங்கீகார நீடிப்பிற்கு விண்ணப்பித்துள்ள கல்லூரிகளில் பல்கலை குழு நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
பொறியியல் கல்லூரி:
தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேசமாக வீசி வருகிறது. இதன் காரணமாக பள்ளி (12ம் வகுப்பு தவிர்த்து) மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலன் கருதி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் ஆண்டு தோறும் தனது அங்கீகாரத்தை நீட்டித்து வரும்.
TN Job “FB Group” Join Now
அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகார இணைப்பு அந்தஸ்தின் கீழ் சுமார் 550க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் பி.ஆர்க்., கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகள் அனைத்தும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற வேண்டும். அதேபோல் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தை பின்பற்றி, தேர்வுகள் நடத்தி, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கவும் அண்ணா பல்கலையில் இணைப்பு சான்றிதழ் பெற வேண்டும்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – இன்று முதல் தொடக்கம் !
அதேபோல் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கும் அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்துள்ள கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, அண்ணா பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ள கல்லூரிகளுக்கு பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளடங்கிய குழு நேரில் ஆய்வு செய்ய அனுப்பப்படும். அவர்கள் கல்லூரி வளாகம், மைதானம், நூலகம், கட்டடங்கள், சட்ட ரீதியான அனுமதி மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.