சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஆபரண தங்கத்தின் கடந்த சில நாட்களாகவே குறைந்து கொண்டே சென்றது. இந்நிலையில் மக்கள் நகைவாங்க ஆர்வம் செலுத்திய நிலையில் மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர ஆரம்பித்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
கடந்த இரண்டு வாரங்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டும், குறைந்து கொண்டுமாக இருக்கிறது. தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நகைப்பிரியர்களுக்கு தங்கத்தின் மீது உள்ள ஆசை மட்டும் குறைவதே இல்லை. பெரும்பாலும் இல்லத்தரசிகளும் தங்கத்தில் முதலீடு செய்வதை தான் விரும்பி வருகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே தங்கத்தின் விலை பல ஆயிரங்கள் அதிகரித்து மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் – நீச்சல் குளம், அங்கன்வாடி மையங்கள் மீண்டும் திறப்பு!
தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்தும் பாதிப்படைந்துள்ளது. இதனால் பங்குச்சந்தை நிலவரம் மிகவும் சரிவடைந்துள்ளது. எண்ணெய், டீசல், பெட்ரோல் என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக அதிகரித்தது. இதனால் தங்கத்தின் விலையும் தாறுமாறாக அதிகரித்து சில நாட்களுக்கு முன்பு ஒரு சவரன் 40,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பிறகு சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்தது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.38,456 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,807 க்கு விற்பனையானது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு – ரூ.1000 கோடி ஒதுக்கீடு!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.38,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 அதிகரித்து ரூ.4,822 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் நேற்று ரூ.72.70 க்கு விற்பனையான நிலையில் இன்று 20 காசுகள் உயர்ந்து ரூ.72.90 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கத்தின் விலை உயர தொடங்கியதால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.