சென்னை: நகைப்பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் திடீரென தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூபாய் 400 குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டும், குறைந்து கொண்டும் செல்கிறது. என்னதான் தங்கத்தின் விலை பல மடங்காக பெருகி கொண்டே சென்றாலும் நகைப் பிரியர்கள் தங்களது பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்பி வருகின்றனர். தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தாய்மார்களுக்கு தங்கத்தின் மீது உள்ள ஆசை மட்டும் குறைவதில்லை. இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே தங்கத்தின் விலை பல ஆயிரங்கள் அதிகரித்து கிட்டத்தட்ட 40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் போரினால் பங்குச்சந்தை நிலவரம் மிகவும் சரிவடைந்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்கள் கவனத்திற்கு – குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு!
இதனால் எண்ணெய் டீசல் என அன்றாட தேவை பொருட்கள் அனைத்தின் விலையும் பலமடங்கு பெருகியது. இதோடு சேர்ந்து தங்கத்தின் விலையும் 40 ஆயிரத்திற்கும் மேல் விற்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை பாதியாக குறைந்து நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 39,080 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டிருந்தது மற்றும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,885க்கு விற்பனையானது. அதேபோல சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 74.70 ரூபாய்க்கு விற்பனையானது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? அரசு விளக்கம்!
தற்போது மறுபடியும் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.38,552-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து ரூ.4,819க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.72.80 க்கு விற்பனையாகி வருகிறது. கிடுகிடுவென தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டிருந்த சமயத்தில் தற்போது சற்று குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.