IPL 2022: CSK ரசிகர்கள் கவனத்திற்கு – சாஹர் & கெய்க்வாட்டின் உடற்தகுதியால் அணிக்கு பின்னடைவு?

0
IPL 2022: CSK ரசிகர்கள் கவனத்திற்கு - சாஹர் & கெய்க்வாட்டின் உடற்தகுதியால் அணிக்கு பின்னடைவு?
IPL 2022: CSK ரசிகர்கள் கவனத்திற்கு - சாஹர் & கெய்க்வாட்டின் உடற்தகுதியால் அணிக்கு பின்னடைவு?
IPL 2022: CSK ரசிகர்கள் கவனத்திற்கு – சாஹர் & கெய்க்வாட்டின் உடற்தகுதியால் அணிக்கு பின்னடைவு?

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திர வீரர்களான தீபக் சாஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் இவர்களது பிட்னஸ் குறித்த விவகாரம் அணிக்கு ஒரு கவலையாக மாறி இருக்கிறது.

CSK அணி:

2022 IPL போட்டிகளின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி மார்ச் 26ம் தேதி அன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் வைத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸை (KKR) எதிர்கொள்கிறது. இப்போது கேப்டன் MS தோனி உட்பட ஒரு சில CSK அணியின் வீரர்கள் போட்டிக்கான தயாரிப்புகளை ஏற்கனவே தொடங்கிவிட்டனர். அதாவது, இம்முறை மஹாராஷ்டிரா மாநிலத்தில் வைத்து IPL போட்டிகள் அனைத்தும் நடைபெற இருக்கும் நிலையில் CSK அணியினர் சென்னையில் உள்ள அவர்களது சொந்த மைதானத்திற்கு பதிலாக சூரத்தின் லால்பாய் காண்டிராக்டர் ஸ்டேடியத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக ரேஷன் கடைகளில் 4000 காலிப்பணியிடங்கள் – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

இப்போது CSK அணியின் தொடக்கப் போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதால், அவர்கள் முழு வீச்சுடன் தயாராகி வருகின்றனர். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியினருக்கு கவலை அளிக்க கூடிய விஷயமாக இருப்பது தீபக் சாஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் பிட்னஸ் விவகாரம் தான். அதாவது இந்த இரண்டு வீரர்களும் எப்போது அணியில் இணைவார்கள் என்று CSK தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதனால் கூட சொல்ல முடியவில்லை. இரண்டு வீரர்களும் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளனர் என்பது தான் CSK அணி வெளியிட்ட ஒரே தகவல்.

இது குறித்து CEO விஸ்வநாதன் கூறுகையில், ‘அவர்களின் தற்போதைய உடற்தகுதி நிலை குறித்து எங்களுக்குத் தெரியாது. மேலும் அவர்கள் எப்போது அணியில் சேருவார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இரண்டு வீரர்களும் தற்போது பிசிசிஐயின் மேற்பார்வையில் இருக்கிறார்கள். அவர்கள் மேட்ச் ஃபிட்டாக இருந்தால் தேவையான அனைத்து உடற்தகுதி சோதனைகளையும் முடித்தவுடன் அவர்கள் அணிக்கு திரும்புவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒயிட்-பால் தொடரின் போது காயமடைந்த தீபக் சஹார் இதுவரை பயிற்சி முகாமில் சேரவில்லை. அதே போல கடந்த ஆண்டு IPL போட்டிகளில் ஆரஞ்சு தொப்பியை வென்ற ருதுராஜ் கெய்க்வாட், கடந்த மாதம் தனது வலது கையில் ஏற்பட்ட மணிக்கட்டு காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகினார். இப்போது இவர்கள் இருவரும் CSK அணிக்கு திரும்புவார்களா என்று பெரிய சந்தேகங்கள் எழுந்துள்ளது.

12 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.15,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

இப்போது நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் தீபர் சஹாரின் காயம் மிகவும் தீவிரமானது என்பதால், அது அவரை முழு போட்டியிலிருந்தும் வெளியேற்றக்கூடும் என்று அறிக்கைகள் கூறுகின்றன. அது உண்மையாக இல்லாவிட்டாலும், அவர் குறைந்தது பாதி போட்டிகளையாவது தவறவிடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதே போல கெய்க்வாட்டின் நிலைமையும் சீராகவில்லை என்றால் இந்த இரண்டு நட்சத்திர வீரர்களில் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இந்த சீசன் முழுவதும் தத்தளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!