மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? அரசு விளக்கம்!
பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தேசம் கிடையாது என மத்திய அரசு பதில் கூறியுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம்:
தமிழகத்தில் 2003ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என பல பாதகமான அம்சங்கள் இடம்பெற்றன. எனவே பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதனை அடுத்து அனைத்து அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என போராட்டம் நடத்தினர்.
TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டத்தை முன்வைத்தனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகின.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – அகவிலைப்படி (DA) உயர்வு குறித்து நாளை அறிவிப்பு?
இந்நிலையில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பழைய பென்ஷன் திட்டம் இந்த நிதி ஆண்டு அமலுக்கு வந்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தை தொடர்ந்து மற்ற மாநிலத்தில் இந்த பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தேசம் கிடையாது என மத்திய அரசிடம் இருந்து பதில் வந்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.