தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? உத்தரவிட தயங்கும் அரசு!!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு தயக்கம் காட்டி வருகிறது. சட்டப்பேரவை தேர்தல் காரணமாக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முழு ஊரடங்கு – அரசு தயக்கம்:
தமிழகம் முழுவதும் கடந்த வருட மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கிய கொரோனா தற்போது வரை கட்டுக்குள் வரவில்லை. ஆண்டு இறுதியில் சிறிது பாதிப்பு குறைந்து இருந்த நிலையில், தற்போது 2வது அலை வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
உத்திர பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட விதிமுறைகளும் அடக்கம். ஆனால் தமிழகத்தில் தற்போது வரை அது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. நேற்று இது தொடர்பாக தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அவர்களின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி – ஜூலை 1 முதல் வழங்க முடிவு!!
அதற்கு முந்தைய தினம் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்தினார். ஆனால் அக்கூட்டத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை. மாறாக ஏப்ரல் 10ம் தேதி முதல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் இவை கொரோனா பரவலை கட்டுப்படுத்தாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மாறாக கடந்த ஆண்டை போல் கடும் நடவடிக்கைகள் தேவை என கூறியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
பொதுவாக ஒரு மாநிலத்தில் ஊரடங்கு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை அதன் முதல்வர் அவர்களே அறிவிப்பார். ஆனால் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அரசின் செயல்பாடுகள் அனைத்தும் முழுக்க முழுக்க தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால் முதல்வர் அவர்களால் எந்த ஒரு கொள்கை முடிவினையும் அறிவிக்க இயலாது. அது தான் மரபு.
TN Police Constable PMT/PET தேர்வுகள் ஒத்திவைப்பு – டிஜிபி அறிவிப்பு!!
மேலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2 வார காலம் கழித்து வருகிற மே 2ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தமிழக நிர்வாக நடவடிக்கைகளை தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் கவனித்து வருகிறார். இருப்பினும் முதல்வர் ஆட்சியில் இல்லாத காரணத்தால் ஊரடங்கு தொடர்பான முடிவுகள் எடுப்பதில் தயக்கம் நிலவுவதாக கூறப்படுகிறது. எனவே வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னரே இத்தகைய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.