நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள் இன்று இரவு 8 மணி அளவில் பல்வேறு அமைச்சக உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
பிரதமர் ஆலோசனை:
நாடு முழுவதும் கடந்த வருட மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது வரை பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. நாளடைவில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். மேலும் ஆண்டு இறுதியில் கொரோனா பரவலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 வார காலமாக நோய்த்தொற்று மீண்டும் புதிய உச்சத்தை அடைந்து உள்ளது.
விவேகானந்தன் முதல் பத்ம ஸ்ரீ விவேக் வரை – சின்ன கலைவாணர் கடந்து வந்த பாதை!!
தினசரி 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் 2வது இடத்தில் உள்ளது. மேலும் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கிடையில் தடுப்பூசி போடும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், மத்திய அரசு கூடுதல் டோஸ்களை அனுப்பி வைக்குமாறும் அந்தந்த மாநில முதல்வர்கள் சார்பில் கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. இருப்பினும் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தினால் கொரோனா பரவல் வேகத்தை குறைக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இன்று இரவு 8 மணிக்கு அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி – ஜூலை 1 முதல் வழங்க முடிவு!!
இதில் பல்வேறு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி தட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.