மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி – ஜூலை 1 முதல் வழங்க முடிவு!!
கொரோனா தொற்றுநோய் காரணமாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மூன்று தவணை அகவிலைப்படியினை அரசு நிறுத்தி வைத்தது. இந்நிலையில் வரும் ஜூலை 1 முதல் அதனை மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அகவிலைப்படி தவணை:
ஜூலை 1, 2021 முதல் டி.ஏ. (அகவிலைப்படி) செலுத்துதல் தொடர்பாக நாடாளுமன்றத்தின் மேல் சபையில் வழங்கப்பட்ட பதிலில், நிதித்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், சி.ஜி.எஸ்ஸின் நிலுவையில் உள்ள மூன்று டி.ஏ. தவணைகள் வழங்கப்படும் என தெரிவித்தார். கொரோனா தொற்றுநோய் காரணமாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மூன்று தவணை டிஏ – ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய தேதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
01.07.2021 முதல் வரவிருக்கும் அகவிலைப்படி வழங்கப்படும் பொழுது, 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 முதல் நடைமுறைக்கு வரும் டிஏ விகிதங்கள் வருங்காலத்தில் செலுத்தப்படும். தற்போது அனைத்து சிஜிஎஸ் மற்றும் ஓய்வூதியதாரர்களும் 17% டிஏவைப் பெறுகின்றனர், இது இப்போது ஜனவரி 1, 2020 முதல் 3% டிஏ உயர்வு, ஜூலை 1, 2020 முதல் 4% டிஏ உயர்வு, மற்றும் எதிர்பார்க்கப்படும் 4% டிஏ உயர்வு உள்ளிட்ட 28% ஆக உயரக்கூடும்.
TNEB Assistant Engineer தேர்வுகள் ஒத்திவைப்பு – TANGEDCO அறிவிப்பு!!
இது 65 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும். டிஏ வழங்கப்பட்ட வுடன், ஓய்வூதியம் பெறுவோருக்கான படியும் உயர்த்தப்படும் (DR). இது அவர்களின் ஓய்வூதியத்தை அதிகரிக்க வழிவகுக்கும். டிஏ உயர்வு வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் கிராஜூவிட்டி பங்களிப்பு ஆகியவற்றை அதிகரிக்கும்.
Seems to be very useful!