தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு – புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு! மார்ச் 1 கடைசி நாள்!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு தாரர்கள் தங்கள் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிவிட்டார்கள். இவர்களுக்கு தற்போது ஒரு மாபெரும் வாய்ப்பை தமிழக அரசு தற்போது வழங்கியுள்ளது.
வேலைவாய்ப்பு பதிவு
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவுகளை செய்பவர்களுக்கு அரசு பணியிடத்தில் வேலைவாய்ப்புகளை பெற முடியும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 2014, 2015, 2016ம் ஆண்டுகளில் தங்கள் பதிவை பல்வேறு காரணங்களால் எராளமான பதிவுதாரர்கள் புதுப்பிக்க தவறியுள்ளனர். இதனால் இவர்களுக்கு அரசு பணிகளில் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால் தமிழக அரசு இவர்களின் நலன் கருதி மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் 2017, 2018 மற்றும் 2019 பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஏற்கனவே புதுப்பிக்க சலுகை வழங்கி இருந்தது.
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.20,000 அடிப்படை சம்பளத்தில் ரூ.2 கோடி வருமானம்!
இதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதலில் வேலைவாய்ப்பு பதிவை அலுவலகத்திற்கு நேரில் சென்று புதுப்பிக்க கூடிய நிலை இருந்தது. அதனால் பதிவை புதுப்பிக்க அதிக நேரம் செலவழிந்தது. ஆனால் இப்போது அனைத்து துறைகளிலும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பு பதிவை ஆன்லைன் மூலமாக இணையதளத்தில் சென்று புதுப்பித்து கொள்ளலாம். இதற்கு https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணைதளத்தில் சென்று புதுப்பிக்க தவறிய பதிவினை புதுப்பித்து கொள்ளலாம்.
தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!
மேலும் தங்களின் கல்வித்தகுதி பற்றிய தகவல்களையும் இதில் புதுப்பித்து கொள்ளுவதற்கான வசதிகளும் உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி அன்று முதல் வருகிற மார்ச் 1ம் தேதி வரை பதிவை புதுப்பித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் இணையதள முகவரி மூலமாகவோ அல்லது அருகில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை கொடுத்து புதுப்பித்து கொள்ளலாம்.