தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு உத்தரவு அமல் - புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு உத்தரவு அமல் - புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஜனவரி 31ம் தேதி வரை இரவு ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3ம் அலை தாக்குதல் பரவ தொடங்கியுள்ளது. கொரோனா பரவலின் ஆரம்ப நாட்களிலேயே தினசரி பாதிப்பு எண்ணிக்கை எல்லையை மீறியதால் கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் பல முக்கிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வார இறுதி நாட்களில் மக்கள் அதிக அளவில் வெளியில் கூடுவதால் நோய் பரவல் விகிதம் அதிகரிக்கும் அபாயம் அதிகம் உள்ளதால் வார இருந்து ஊரடங்கு விதிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த தொடங்கியது.

IND vs SA 2nd ODI: தென்னாப்பிரிக்க அணி சிறப்பான பந்துவீச்சு – இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்!

அதன்படி கடந்த ஜனவரி 9 மற்றும் 16ம் தேதிகளில் வந்த ஞாயிற்று கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் அத்தியாவசிய தேவைகளான மருந்து மற்றும் பால் கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டது. மற்ற அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டது. மேலும் மெட்ரோ ரயில், பேருந்து போன்ற அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் 23ம் தேதி பற்றிய அறிவிப்பு ஏதும் முன்னதாக வெளியாக நிலையில் இருந்த போது முழு ஊரடங்கு குறித்து அதிக கேள்விகள் எழுப்பப்பட்டது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? முதல்வரின் முடிவு!

தற்போது தமிழக அரசு வரும் ஜனவரி 23ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் அரசு இதற்கு முன்னர் அறிவித்திருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கடைபிடிக்கப்படும் என்றும், வெளியூர் பயணிகளின் நலன் கருதி மாவட்ட பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் ஆட்டோக்கள் செயல்படலாம் என்றும் அவற்றை ஆன்லைன் மூலம் மக்கள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வாடகை கார்கள் தாங்கள் செல்லும் பணியின் ஆவணத்தை காண்பித்து பயணிக்கலாம் என்றும் அரசின் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!