தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று இரவு 9.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கம் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சிறப்பு ரயில்
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரு கட்டமாக நாளை (ஏப்ரல் 19) நடைபெற இருக்கிறது. நேற்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்துள்ள நிலையில், வாக்குபதிவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக நாளை தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க வெளி ஊர்களுக்கு செல்வோருக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
அதே போல சென்னை தாம்பரம் – நெல்லை இடையே இன்று இரவு 9.50 மணிக்கு சிறப்பு ரயில் (06007) இயக்கப்பட இருப்பதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மறுமார்கமாக நாளை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்கப்படும். எனவே மக்கள் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்தி கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.