தமிழகத்தில் திரையரங்குகள் மூடல் – சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

0
தமிழகத்தில் திரையரங்குகள் மூடல் - சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் திரையரங்குகளில் பகல் நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரு கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை மாலையுடன் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கோயம்புத்தூர் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் அதுமட்டுமில்லாமல் கோயம்புத்தூர் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளும் தனியார் நிறுவனங்களும் மூடப்பட இருக்கின்றன.

சுகாதார நிலையங்களில் தடுப்பூசி – வெளியான முக்கிய அறிவிப்பு!

அந்த வரிசையில் திரையரங்குக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 19ஆம் தேதி பகல் நேர காட்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள 1168 திரையரங்குகளில் முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை திரையரங்க உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 19ஆம் தேதி மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் வழக்கம் போல திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!