தமிழகத்தில் ஏப். 17 ( நாளை) விடுமுறை கோரிக்கை – அரசின் முடிவு என்ன?

0
தமிழகத்தில் ஏப். 17 ( நாளை) விடுமுறை கோரிக்கை - அரசின் முடிவு என்ன?

பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் சார்பில் இருந்து அரசு தேர்வுகள் இயக்கத்துக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது தேர்வு தாள்களை திருத்தும் பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் 19ஆம் தேதி அன்று தேர்தல் வாக்குப்பதிவிற்கு ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறை இயக்குனருக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 18ஆம் தேதி அன்று தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் தேர்தல் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டியுள்ளது.

தமிழகத்தில் திரையரங்குகள் மூடல் – சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

எனவே ஏப்ரல் 17ஆம் தேதி அன்று ஒரு முழு நாள் அல்லது அறை நாள் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து பேசிய அரசு தேர்வு துறை இயக்குனர் தேர்வு தாள் திருத்தும் முகாம் மையங்களுக்கு இதற்கான முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், முகாம் அலுவலர் விருப்பம் போல் செயல்படலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். இதனால் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!