இலங்கைக்கு 10 ஆயிரம் டன் வெங்காய ஏற்றுமதிக்கு – மத்திய அரசு அனுமதி!

0
இலங்கைக்கு 10 ஆயிரம் டன் வெங்காய ஏற்றுமதிக்கு - மத்திய அரசு அனுமதி!

இந்திய அரசானது பல மாதங்களுக்கு பிறகு இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி அளித்துள்ளது.

வெங்காய ஏற்றுமதி:

2023ஆம் ஆண்டு முதல் நாட்டில் அரிசி, கோதுமை, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான விலை பல மடங்கு உயர்வை சந்தித்தது. இதன் காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் எழுந்தது. இதனை தவிர்ப்பதற்காக மத்திய அரசு குறிப்பிட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு தடை உத்தரவை விதித்திருந்தது. அதன்படி மார்ச் 31, 2024ஆம் தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.

தமிழகத்தில் ஏப். 17 ( நாளை) விடுமுறை கோரிக்கை – அரசின் முடிவு என்ன?

இந்நிலையில் தற்போது வெங்காய உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் ஏற்றுமதிக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி இலங்கைக்கு பத்தாயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு ஏற்கனவே வழங்கி வந்த 24 ஆயிரம் டன் வெங்காயத்துடன் கூடுதலாக 10,000 மெட்ரிக் டன் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!