தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு – நிதியமைச்சர் அறிவிப்பு!
கடந்த கொரோனா தொற்று பாதிப்புகளின் போது தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது தமிழக அரசின் பட்ஜெட்டில் அகவிலைப்படி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த ஆண்டு பதவியேற்ற போது தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்து வந்தது. அதற்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வானது கொரோனா கால நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் திமுக அரசு வந்த பிறகு அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தி அளிக்கப்படும் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதைப்போலவே கடந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி முதல் DA உயர்வு அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
தமிழகத்தில் இன்று தடாலடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு செம வேட்டை!
இந்நிலையில், 2022 – 2023ம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலில் தமிழக மக்களுக்கான மற்றும் அரசு ஊழியர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்கும் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசு பணியாளர்கள் நலன் குறித்து நிதியமைச்சர், உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகையை அரசு ஊழியர்களுக்கு வழங்குவதற்காகவும், ஓய்வூதியப் பயன்களை வழங்குவதற்காகவும் பட்ஜெட்டில் ஏறத்தாழ 19000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அரசு ஊழியர்களிடம் தெரிவித்தபடியே ஜனவரி முதல் அகவிலைப்படி முதல் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் நிலவி வந்த நிலையில், தமிழக நிதியமைச்சரின் அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.