தமிழகத்தில் யார் யாருக்கு இ-பாஸ் தேவை? ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் வருகிற ஜூலை மாதம் 5ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது எதெற்கெல்லாம் இ-பாஸ் முறை அவசியம் என்பதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.
இ-பாஸ்:
தமிழகத்தில் கடந்த ஜூன் 20ம் தேதி அன்று மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு அதற்கேற்றவாறு தளர்வுகள் அளித்து, ஜூன் 28 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இன்னும் இரண்டு தினங்களில் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்து வருகிற ஜூலை 5ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கிலும் இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஜூன் 26 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
புதிய தளர்வுகள் படி எதற்கெல்லாம் இ-பாஸ் அவசியம் என்பதற்கான முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட சேவைகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி வகை 1ல் இடம்பெற்றிருக்கும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல், கரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து இதர மாவட்டங்களுக்கு திருமண நிகழ்வுகளுக்காக செல்ல இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் திறப்பு – அரசு அனுமதி!!
திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வகை 2 மற்றும் 3 ல் இடம் பெற்றிருக்கும் 27 மாவட்டங்களுக்கு இடையே திருமண நிகழ்வுகளுக்காக செல்ல இ-பாஸ் அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் போன்ற பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் அதிகாரபூர்வ தளமான https://eregister.tnega.org என்ற தளத்தில் இ-பாஸ் பெற்று கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.