தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் திறப்பு – அரசு அனுமதி!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் தாக்கம் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வழிபாட்டு தலங்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மே 10 வரை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் காரணமாக கொரோனா பரவல் குறைவாக உள்ள காரணத்தால் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஜூன் மாதம் 28 வரை கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டன.
சென்னையில் ஜூன் 26 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
மேலும் பகுதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைவாக உள்ள காரணத்தினால் பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டது. மற்ற 23 மாவட்டங்களில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், மீதமுள்ள 11 மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு – 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதி!
அதன் பின்னர் இன்று சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 வரை நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மற்றும் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அர்ச்சனை, திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.