சென்னையில் ஜூன் 26 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வரும் 26ம் தேதி சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மின் தடை :
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தற்போது அதிகமாக மின் தடை ஏற்பட்டு வருகிறது. ஊரடங்கால் அலுவலகங்கள் திறக்காததால் வீட்டிலிருந்து பணி புரிவோர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எந்த முன்னறிவிப்புகளும் இன்றி மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் மின் வாரியத்தில் புகார் அளித்து வருகின்றனர். மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதே மின் தடைக்கு காரணம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு – 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதி!
கடந்த 9 மாத காலமாக தமிழகத்தில் எந்த ஒரு மின் பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை.இதன் காரணமாக மின்தடை ஏற்படுவதால் அரசு உத்தரவின் படி பல மாவட்டங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு பகுதிகளாக மின் விநியோகம் குறிப்பிட்ட நேரம் தடை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி வரும் 29 ம் தேதி வரை இந்த மின் தடை தமிழகம் முழுவதும் இருக்கும் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
ஆதார் கார்டில் ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்யும் முறைகள்!
ஏற்கனவே சென்னையில் பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்து விட்டது அந்த வரிசையில் நாளை (26.06.2021) சனிக்கிழமையன்று. சென்னையில் கே.கே நகர். வியாசர்பாடி, கிண்டி, தாம்பரம், மூவரசன் பேட்டை, வில்லிவாக்கம், கோடம்பாக்கம், வேளச்சேரி, செம்பியம், அடையார், திருமுடிவாக்கம், அண்ணா சாலை, அவ்வை நகர், காமராஜர் அவென்யூ மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் 1 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என சென்னை மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.