தமிழகத்தில் 75 ஆயிரம் தடுப்பூசிகள் இறக்குமதி – பணிகள் தீவிரம்!!

0
தமிழகத்தில் 75 ஆயிரம் தடுப்பூசிகள் இறக்குமதி - பணிகள் தீவிரம்!!
தமிழகத்தில் 75 ஆயிரம் தடுப்பூசிகள் இறக்குமதி - பணிகள் தீவிரம்!!
தமிழகத்தில் 75 ஆயிரம் தடுப்பூசிகள் இறக்குமதி – பணிகள் தீவிரம்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த ஹைதராபாத்தில் இருந்து 75 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழகம் வந்தடைந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை மே மாதம் 6 ஆம் தேதி அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டாலும் கொரோனாவை தடுக்க தடுப்பூசி போடுவது தான் ஒரே வழி என்பதால் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதற்காக ஹைதராபாத்தில் இருந்து 75 ஆயிரம் டோஸ் தடுப்பூசி தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கண்டெய்னர் மூலமாக தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இன்று முதல் அமலுக்கு வரும் கடும் கொரோனா கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் இதுவரை 60 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இது போக 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!