தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அச்சம் – சொந்த ஊருக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்புள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையங்களில் குவிந்துள்ளனர்.
கொரோனா தாக்கம் எதிரொலி:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் கடந்த ஆண்டு முதல் பரவி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதனை மக்கள் சரியாக பின்பற்றுவதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தாக்கம் தற்போது வரை குறையாமல் வேகமெடுத்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் மீண்டும் ஊரடங்கு போட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு இதே போல பொதுமுடக்கம் அறிவித்த போது புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக சென்றனர். தற்போது மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல கூட்டம் கூட்டமாக ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 1 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை!!
இதனால் கோவையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் 2 நாட்களாக கூட்டம் அலை மோதுகிறது. இதனால் கொரோனா பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் போது தங்களது சொந்த ஊருக்கு செல்ல வருவாய் துறையின் அனுமதி கடிதம் பெற பெரிதும் சிரமப்பட்டோம்.
உலகம் முழுவதும் 2.4 கோடி குழந்தைகளின் கல்வி கேள்விக்குறி!!
இதனால் தற்போது தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்டால் சிரமம் குறையும்”, இவ்வாறு தெரிவித்தனர். கோவையில் பெரும்பாலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு செல்வதால் தற்போது தொழில் நிறுவனங்களில் வேலை பெரிதும் பாதிக்கப்படுகிறது.