உலகம் முழுவதும் 2.4 கோடி குழந்தைகளின் கல்வி கேள்விக்குறி!!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் 2.4 கோடி குழந்தைகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குழந்தைகளின் படிப்பு பாதிப்பு:
கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஆண்டு முதல் அனைத்து நாட்டு மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலகளவில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனாவை சரி செய்ய பல நாடுகள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டும் உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இருந்தபோதிலும் கொரோனா முற்றிலுமாக அழிந்தபாடில்லை. இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 1.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 904 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் 2.4 கோடி குழந்தைகள் கொரோனாவால் பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி நிலையங்கள் கடந்த ஆண்டு முதல் திறக்கப்படாமல் உள்ளது.
அண்ணா பல்கலையை நிர்வகிக்க ஒருங்கிணைப்பு குழு அமைப்பு – ஆளுநர் உத்தரவு!!
இந்தியாவில் பல ஏழை குழந்தைகள் பள்ளிக்கு செல்வது சந்தேகமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால் மக்கள் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளது. ஆன்லைன் மூலமாக பாடங்களை கவனிக்க தேவையான உபகரணங்கள் இன்றி உள்ளனர். இதனால் ஏழை எளிய மக்களின் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுவதாக சமூக நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.