தமிழகத்தில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – உயர் நீதிமன்றம் விளக்கம்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவால் உரியிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை விளக்கமாக தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றம் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மிக தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு மே 24 வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மக்கள் சிரமப்படாத வகையில் பலர் தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி காலை 6 முதல் 10 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டாலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 33,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 303 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் கொரோனா குறித்து தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது.
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை – முதல்வர் அறிவிப்பு!!
இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை முறையாக வெளியிட வேண்டும் எனவும் மேலும் ஊரடங்கை கடுமையாக்குவது பற்றி அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.