10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து? மாநில கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையிலும் எஸ்.எஸ்.எல்.சி, பி.யூ.சி-2 (10, 12ம் வகுப்பு) தேர்வுகளை ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
பொதுத்தேர்வுகள் ரத்து:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் தொடர்ந்து உள்ளது. நாட்டிலேயே தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் கடந்த வாரத்தில் இருந்து கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. இதனால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக நோய் தடுப்பு நடவடிக்கையாக அங்கு 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – உயர் நீதிமன்றம் விளக்கம்!!
கடந்த ஆண்டும் இதே போல் 1 முதல் 9 மற்றும் பி.யூ.சி முதல் வருட தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பி.யூ.சி -2 ம் ஆண்டு தேர்வை அரசு நடத்தியது. தற்போது ஊடகங்களில் நடப்பு ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று செய்திகள் வந்த நிலையில் கர்நாடகா மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அவர், ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் வெறும் வதந்திகள் தான், எஸ்.எஸ்.எல்.சி, பி.யூ.சி-2ம் ஆண்டு தேர்வு ரத்து செய்வது தொடர்பாக இன்னும் அரசு முடிவெடுக்கவில்லை. ஆதலால் மாணவர்கள் தொடர்ந்து தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.