தமிழகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம் – பிப். 1 முதல் தொடக்கம்!

0
தமிழகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம் - பிப். 1 முதல் தொடக்கம்!
தமிழகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம் - பிப். 1 முதல் தொடக்கம்!
தமிழகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம் – பிப். 1 முதல் தொடக்கம்!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் பற்றி ஆய்வு செய்ய வருகிற பிப் 1 ஆம் தேதி, “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.

“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம்:

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மக்களுக்காக ஏகப்பட்ட நலத்திட்டங்களை அரசு செய்துள்ளது. அதனை தொடர்ந்து மாவட்டங்களில் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வருகிற பிப்.1 ஆம் தேதி துவக்கி வைக்கிறார். அதில் தல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப்பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளை பற்றி ஆய்வு செய்வார்.

Follow our Twitter Page for More Latest News Updates

முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார். இந்த ஆய்வில் குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் மக்களுக்கு சென்று அடைகிறதா என ஆய்வு செய்யப்படும்

நிலுவையில் உள்ள சொத்து வரி – சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

இந்த திட்டத்தின் முதல் நாளான பிப் 1 ஆம் தேதி வேலூர் மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கே உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கோரிக்கைகள், கருத்துக்களை பற்றி அவர் கேட்டறிவார். அதன் பின் நான்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள், காவல்துறை சரக துணைத்தலைவர், காவல்துறைத் தலைவர் (வடக்கு) ஆகியோருடன் மேற்படி மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!