நிலுவையில் உள்ள சொத்து வரி – சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

0
நிலுவையில் உள்ள சொத்து வரி - சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
நிலுவையில் உள்ள சொத்து வரி - சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
நிலுவையில் உள்ள சொத்து வரி – சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

தமிழகத்தில் 2022 – 2023ம் நிதியாண்டுக்கான சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. சொத்து வரியை செலுத்த போதிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

சொத்து வரி:

தமிழக அரசுக்கு பெரும்பாலான வருவாய் சொத்து வரியிலிருந்து கிடைக்கிறது. இதனை கொண்டு அரசு மாநிலத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், தெருவிளக்குகள் சாலை, பூங்கா உள்ளிட்டவைகளை பராமரித்தல் மற்றும் சுகாதார மற்றும் நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஏராளமானோர் சொத்து வரியை செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் 2022 – 2023-ம் நிதி ஆண்டில் சிலர் சொத்து வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் 2 மாதங்களே மீதம் உள்ளதால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிலுவையில் உள்ள சொத்து வரியை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

வீடுகளில் நாய் வளர்க்க புதிய கட்டுப்பாடுகள் – கேரளாவில் அதிரடி நடவடிக்கை!

இந்த சொத்து வரியை நேரடியாகவும் ஆன்லைன் வாயிலாகவும் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி இணையதளம், பாரத் பில் பேமண்ட் சிஸ்டம் (BBPS), NEFT/RTGS, இ – சேவை மையங்கள் வாயிலாக நீங்கள் எளிதாக சொத்து வரியை செலுத்தலாம் என்று மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. சொத்து வரியை செலுத்தி மாநகரின் அடிப்படை கட்டமைப்பினை மேம்படுத்திட உதவிடுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!