தமிழக தலைமை செயலக பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தலைமை செயலாளர் வெளியீடு!
சென்னை தலைமை செயலகத்தில் அவசியமாக தேவைப்படும் பணியில் மட்டும் குறிப்பிட்ட அளவு ஊழியர்கள் பணிபுரிய வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தலைமை செயலாளர் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக ஒரு நாளைக்கு 35 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நோய் தொற்றை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 2 வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கின்ற போதிலும், கொரோனா தாக்கம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களில், அவசியமான பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் பேட்டி!!
அதாவது பொது முடக்க காலத்தில் தமிழகத்தில் இயங்கி வந்த அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே பணி புரியக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. தவிர வங்கிகளும் சுழற்சி முறையில் குறிப்பிட்ட அளவு பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தலைமை செயலகத்தில் மட்டும் அதிகளவு பணியாளர்கள் வேலை செய்ய கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் கொரோனா சூழல் அச்சுறுத்தல் காரணமாக சென்னை தலைமை செயலகத்தில் அவசிய தேவைகளுக்காக மட்டும் குறிப்பிட்ட அளவு பணியாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் என தமிழக தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதாவது தலைமை செயலகத்தில் பணிபுரியும் இணைநோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் கொரோனா தொற்று வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.