தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் பேட்டி!!
தமிழகத்தில் கடந்த மே 24 ஆம் தேதி முதல் 31 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேவை ஏற்படின் தளர்வில்லாத முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என முதல்வர் பேட்டி அளித்துள்ளார்.
முழு ஊரடங்கு
கொரோனா 2 ஆம் பேரலையானது தமிழகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் 34 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தவிர பலி எண்ணிக்கையிலும் சற்று உயர்வு காணப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்திய அளவில் ஒரு நாள் பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஏற்கனவே கை மீறிக்கொண்டிருக்கும் கொரோனா அலையை கட்டுக்குள் கொண்டு வர தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முக்கிய துறைகளின் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் – அரசு உத்தரவு!!
இந்த பொது முடக்கத்தின் போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட போதிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வராத காரணத்தால், எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வில்லா ஊரடங்கில் எவ்வித அத்தியாவசிய சேவைகளுக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
மேலும் பலத்த கண்காணிப்புடன் ஊரடங்கு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேவை ஏற்பட்டால் மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் சட்டமன்ற குழுவின் பரிந்துரை குறித்து ஆலோசித்து, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்களை காப்பாற்ற வேண்டும் அதற்கு முதல்வர் எடுத்த முடிவு சரியே.மக்கள் நலம் முக்கியம்
தளர்வுகளற்ற, தளர்வில்லாத இரண்டுக்கும் கொஞ்சம் வித்தியாசம் சொல்லுங்கள். உதாரணம் உங்கள் பக்கத்தில் இருந்து
தமிழகத்தில் கடந்த மே 24 ஆம் தேதி முதல் 31 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேவை ஏற்படின் தளர்வில்லாத முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என முதல்வர் பேட்டி அளித்துள்ளார்