மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

0
மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

தமிழக அமைச்சரவை கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

அமைச்சரவை கூட்டம்:

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து விவாதம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, பள்ளி, கல்லூரி பெண்களுக்கு தற்காப்பு கலைகள் பயிற்சிகள் வழங்கப்படும் என அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், இதர பின் தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சார்ந்த பெண்களுக்கு கல்வியறிவு வழங்கும் பொருட்டு கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்தியாலயா என்னும் திட்டம் 2004 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், 19 வயதுவரையிலான இளம் பெண்களுக்கு இந்த கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா திட்டம் விரிவு படுத்தப்படும் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!