வங்கிகளில் நிலுவையில் உள்ள தவணையை செலுத்த புதிய திட்டம் – அமைச்சர் வெளியிட்ட அறிக்கை!

0
வங்கிகளில் நிலுவையில் உள்ள தவணையை செலுத்த புதிய திட்டம் -
வங்கிகளில் நிலுவையில் உள்ள தவணையை செலுத்த புதிய திட்டம் – அமைச்சர் வெளியிட்ட அறிக்கை!

தமிழகத்தில் உள்ள வங்கிகளில் தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்க, வங்கிகளில சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் கூட்டுறவு சங்கம் சார்பில் வங்கிகளில் தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டத்தின் கீழ் கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட உள்ளது. இதற்காக வங்கிகளில் சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.  இந்த வாய்ப்பை பயன்படுத்தி கடன்களை தள்ளுபடி செய்யலாம் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெள்ளத்தால் பெரும் சேதம் – முதல்வர் நேரில் ஆய்வு.. மக்களுக்கு நிவாரணம்!

இந்த கூட்டுறவு சங்கம், வங்கிகளில் தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு தீர்வு காணும் சிறப்பு கடன் தீர்வு திட்டம் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இத்திட்டத்தின்படி கணக்கிடப்பட்ட நிலுவைத்தொகையில் 25 சதவீத தொகையை அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 3 மாதத்திற்குள் செலுத்தி, வங்கி மற்றும் சங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். மீதமுள்ள 75 சதவீத தொகையை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நாளில் இருந்து 6 மாத காலத்திற்குள் அதிகபட்சமாக 6 தவணைகளுக்குள் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!