வெள்ளத்தால் பெரும் சேதம் – முதல்வர் நேரில் ஆய்வு.. மக்களுக்கு நிவாரணம்!
தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு முதல்வர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நிவாரணம்:
தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெள்ளம் உருவாகி லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது. பலரும் வீடு, பொருட்கள் என அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். தற்போது வெள்ளநீர் கொஞ்சம் கொஞ்சமாக வடித்து அனைத்து பகுதிகளும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
Join Our WhatsApp Channel ” for Latest Updates
டிச.31ம் தேதி முதல் UPI ஐடி முடக்கம் – உடனே இத பண்ணுங்க!