தமிழகத்தில் ஜன.13 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள வங்கிகள் முக்கிய பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்படும். இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு இடையே மாறுபடும். அதன் படி தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி முதல் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஜனவரி 13 ஆம் தேதி மாதத்தின் 2வது சனிக்கிழமை, ஜனவரி 14 ஆம் தேதி ஞாயிறு மற்றும் போகி பண்டிகை விடுமுறை, ஜனவரி 15 ஆம் தேதி தைப்பொங்கல் விடுமுறை, ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினம் விடுமுறை, ஜனவரி 17 ஆம் தேதி உழவர் திருநாள் விடுமுறை ஆகும். தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால் மக்கள் வங்கி சேவைகளை இன்றே முடித்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.