இந்த மாவட்ட மக்களே உஷார்.. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை கொட்டித் தீர்க்கும்!

0
இந்த மாவட்ட மக்களே உஷார்.. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை கொட்டித் தீர்க்கும்!
இந்த மாவட்ட மக்களே உஷார்.. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை கொட்டித் தீர்க்கும்!
இந்த மாவட்ட மக்களே உஷார்.. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை கொட்டித் தீர்க்கும்!

தமிழகத்தில் மத்திய மேற்கு வங்கக்கடலில்‌ நிலவும்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று (அக் 5) முதல் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வானிலை அறிக்கை

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மத்திய மேற்கு வங்கக்கடலில்‌ நிலவும்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்னும் சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி இன்று (05.10.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர்‌, கடலூர்‌, திருவண்ணாமலை, வேலூர்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி,செங்கல்பட்டு, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை அறிவிப்பில் இன்று (05.10.2022) முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு (06.10.2022 முதல் 09.10.2022) இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் குறித்து எலான் மஸ்கின் இறுதி முடிவு என்ன? அதிரடி அறிவிப்பு வெளியீடு! உயரும் பங்குகள்!

Exams Daily Mobile App Download

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. மேலும் மீனவர்கள் இன்று முதல் 09.10.2022 ஆம் தேதி வரை குமரிக் கடல், மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!