ட்விட்டர் குறித்து எலான் மஸ்கின் இறுதி முடிவு என்ன? அதிரடி அறிவிப்பு வெளியீடு! உயரும் பங்குகள்!
உலகின் முதல் பணக்காரராக விளங்கும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்து வந்தார். இதையடுத்து பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் திடீரென தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்கினார். இந்த நிலையில் இது குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ட்விட்டர்:
உலகளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான ட்விட்டர் ஒவ்வொருவரின் தனிப்பட்ட மற்றும் பொது கருத்துக்களை தெரிவிக்கும் தளமாக உள்ளது. இந்நிலையில் பயனர்களுக்கு உதவும் வகையில் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை ட்விட்டர் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் வாங்க சம்மதம் தெரிவித்து சிறிது சிறிதாக ட்விட்டரின் பங்குகளை வாங்க தொடங்கினார்.
இதுவரை ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை வாங்கிய எலான் மஸ்க் பிறகு ஒட்டுமொத்த ட்விட்டர் நிறுவனத்தையும் 44 மில்லியன் டாலருக்கு வாங்கத் தயாராக இருப்பதாக கூறினார். இதனையடுத்து எலான் மஸ்க் ட்விட்டரை வாங்க ட்விட்டர் நிர்வாகக்குழுவும் சம்மதம் தெரிவித்தது. மேலும் லான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதனால் இனி வரும் காலங்களில் ட்விட்டரில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ட்விட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்க்கிற்கு மாற்றும் பணிகள் நடந்து வந்தது. ஆனால் திடீரென எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் எலான் மஸ்க் ஒப்பந்தத்தின் படி ட்விட்டரை வாங்க தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார். அதனால் ட்விட்டர் பங்குகள் 20% அதிகரித்து 25 லாடர்களாக உயர்ந்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்