தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை !
தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. தலைநகர் சென்னையில் மற்றும் அதிக அளவு பதிவாகி இருந்தது. இந்த வகையில் இரவு பகல் பார்க்காமல் மழை பெய்தது. இதனை தொடர்ந்து தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஜனவரி 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? ஆளுநர் விளக்கம்!
இந்த அறிக்கையில் இலங்கையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9 ஆம் தேதி தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை மற்றும் மிதமான மழை பெய்யும். இதனை தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கான தேதி – முழு விபரங்கள் இதோ!
இந்த அடிப்படையில் இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனை தொடர்ந்து குமரி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக இன்று மேற்கூறிய டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்தோடு காணப்படும்.