கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? ஆளுநர் விளக்கம்!
புதுச்சேரியில் கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தேவைப்பட்டால் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு:
உலகம் முழுவதும் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமிக்ரான் தொற்று பரவி வருகிறது. இதுவரை 120க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் பரவியுள்ளது. அதனால் அனைத்து நாடுகளும் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ஓமிக்ரான் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. மேலும் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பாதிப்புகளும் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியவர்களும் தொற்று கண்டறியப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கான தேதி – முழு விபரங்கள் இதோ!
இதனால் அனைத்து மாநிலங்களும் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் பகுதி நேர ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியிலும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த கொரோனா மேலாண்மை குழுவின் அவசர கூட்டம் நடைபெற்றது வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
Post Office பொன்மகன் சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.1000 முதலீட்டில் ரூ.5,27,446 ரிட்டன்ஸ்!
பொங்கல் விழா கொண்டாட தடை இல்லை. காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும். திருமணம், விளையாட்டு மற்றும் விழாக்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கலாம். கடந்த வருடம் பரவி இரண்டாவது கொரோனா அலையின் போது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்படவில்லை. தற்போது மூன்றாம் அலை பரவி வருகிறது. தேவை ஏற்பட்டால் ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.