தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கான தேதி – முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை தை மாதம் முதல் நாளான ஜனவரி 15ம் தேதி வெள்ளிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகை குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
பொங்கல் பண்டிகை:
தமிழகத்தில் ஆண்டுதோறும் தை முதல் நாள் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகை தமிழர் திருநாள், தை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. விவசாயிகளுக்கும், விவசாய தொழிலுக்கு உதவும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளின் இரண்டாவது நாள் தான் தைப்பொங்கல். அன்றைய தினம் வயல்களில் விளைந்து அறுவடை செய்யப்பட்ட நெல், கரும்பு மற்றும் தானிய வகைகளை தங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து அந்த உழைப்பின் பயனை கொண்டாடி மகிழ்வது தான் இந்த பாரம்பரியத் திருவிழாவாகும்.
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – துணைநிலை ஆளுநர் விளக்கம்!
இப்பண்டிகையை கொண்டாட ஒரு வாரத்திற்கு முன்பாகவே மக்கள் தயாராகி விடுவர். தை மாதம் வருவதற்கு முன்னரே வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்வது, வீட்டிற்கு வண்ணம் பூசுவது, பழைய பொருட்களை போகி அன்று எரிப்பது, மாவிலை தோரணம் கட்டி வாசலில் வண்ண கோலமிட்டு பொங்கல் பானையை மாவிலை, மஞ்சள் கிழங்கு, பூக்கள் மற்றும் கரும்பு ஆகியவற்றால் அலங்காரம் செய்வது போன்ற அனைத்து வேலைகளையும் செய்ய தொடங்கிவர். பிறகு பொங்கலன்று பாரம்பரிய முறைப்படி வெளிப்புறங்களில் அடுப்பில் பொங்கல் பானையை வைத்து பொங்கல் வைப்பர்.
வீட்டின் வெளிப்புறம், மொட்டை மாடி, தோட்டம் போன்ற வெளி இடத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடுவர். கிராமம் மற்றும் சிறு நகரங்களில் விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கு நன்றியும் மரியாதையும் செலுத்தும் வகையில், வீட்டு வாசலில் பொங்கல் வைக்கின்றனர். 2022 ஆம் ஆண்டு தைப்பொங்கல் ஜனவரி 15 வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவின் வெவ்வேறு மாநிலத்திலும் விவசாயம் மற்றும் உழவுத் தொழிலை அடிப்படையாக வைத்து அவரவர் பாரம்பரிய முறைப்படி இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.