10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – துணைநிலை ஆளுநர் விளக்கம்!
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
புதுச்சேரியில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனால் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை போல இல்லாமல் புதுச்சேரியில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பதால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
Post Office பொன்மகன் சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.1000 முதலீட்டில் ரூ.5,27,446 ரிட்டன்ஸ்!
இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத தயாராகி வரும் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். இது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகளில் 15 முதல் 18 வயது உடைய மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அவர் பார்வையிட்டார்.
மாதம் ரூ.86,500 சம்பளத்தில் இந்திய சணல் கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அப்போது பேசிய அவர் கூறுகையில், பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விட்டால் தடுப்பூசி செலுத்த முடியாது அதனால் தான் தற்போது பள்ளிகளை நடத்தி வருகிறோம். தேவைப்பட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் எனவும், பள்ளிகளில் படிக்காத 5 முதல் 18 வயது உடைய மாணவர்களுக்கு தடுப்பூசி அவர்களது பகுதிக்கு சென்று செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்து இருக்கிறார்.