தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை ஆய்வு மையம் அறிக்கை!
வங்கக்கடலில் அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. அதனால் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை:
தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வழக்கமாகவே மார்ச் முதல் ஜூலை வரையிலான மாதங்களில் கோடை வெப்பம் அதிகரித்து காணப்படும். வாரம் முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொளுத்தி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கொளுத்தும் வெப்பத்தினால் வெப்பம் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் மே 18ம் தேதி நேரடி நியமன தோ்வு – கால்நடை மருத்துவ பட்டதாரிகள் கவனத்திற்கு!
இந்த நிலையில் வங்கக்கடலில் அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர்,நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு,சேலம், நாமக்கல், தர்மபுரி, காரைக்கால், கிருஷ்ணகிரி ஆகிய 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நகர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை புயலாக வலுவடைந்து வடமேற்கு நகர்ந்து மே 10ல் வட ஆந்திரா, ஒடிசா கரையோரத்தில் நிலவும். வங்கக்கடலில் உருவான புயல் வடக்கு – வடகிழக்கில் நகர்ந்து ஒடிசா கடற்கரையில் நீடிக்கும் என்றும் புயலின் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.