தமிழகத்தில் மே 18ம் தேதி நேரடி நியமன தோ்வு – கால்நடை மருத்துவ பட்டதாரிகள் கவனத்திற்கு!
தமிழக ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு, வரும் மே 18 ஆம் தேதி நேரடி நியமனத் தோ்வு நடைபெறவுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி ஆவின் பொது மேலாளர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த நேரடி நியமனத் தோ்வில் கலந்து கொள்ளலாம்.
நேரடி நியமன தோ்வு:
தமிழக அரசு தற்போது பால் உற்பத்தியை அதிரிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகள் கிடைத்திடவும், அதன் மூலம் அவா்களின் வாழ்வாதாரம் வளம் பெற்றிடவும் முனைப்புடன் திட்டங்களை செயலாற்றி வருகிறது. அதன்படி, தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் (2021-2022) புதிய கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப் பெற்று தற்போது இருக்கும் கால்நடை மருத்துவா்களுடன் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட, அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேற்கண்ட திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப் படிப்பு கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும், நடைபெறும் நேரடி நியமன தோ்வில் கலந்துகொள்ளலாம். இது குறித்து கன்னியாகுமரி ஆவின் பொது மேலாளா் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அந்த செய்தி குறிப்பில் தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் காலியாக உள்ள 2 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
தமிழகத்தில் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு கவனத்திற்கு – அரசு முக்கிய அறிவிப்பு!
இந்த நேரடி நியமனத் தோ்வில் 50 வயதுக்குட்பட்டவர்கள், சொந்தமாக இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும் கால்நடை மருத்துவ பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடனும் மே18 ஆம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், லிமிட்டெட், நாகா்கோவில் என்ற முகவரியில் நடைபெறும் நேரடி நியமனத் தோ்வில் கலந்துகொள்ளலாம்.