தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. அதே போல இன்றும் நாளையும் 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளத்தக்க வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

கனமழை:

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இருந்து வருகிறது. தற்போது எந்தெந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்பதற்குரிய அறிவிப்பை சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. அதாவது, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் பரிசு – ஜூலை 1 முதல் சம்பள உயர்வு? மாத வாரியான ஊதிய விவரம் இதோ!

நாளையும் அதே போல தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறது. இதனை தொடர்ந்து மே 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

Exams Daily Mobile App Download

சென்னையில் அடுத்த 48மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரிசெல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரிசெல்சியஸ் ஆகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை கடலோர பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!