மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் பரிசு – ஜூலை 1 முதல் சம்பள உயர்வு? மாத வாரியான ஊதிய விவரம் இதோ!
வரும் ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு எந்த அளவில் சம்பளம் உயரும் என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஊதிய உயர்வு
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகையை அரசு உயர்த்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, அரசு 4 சதவீதம் டிஏவை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த தொகை ஜூலை 1 முதல் உயர்த்தப்படலாம் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது. இதன் மூலம் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் பயனடைய உள்ளனர். இதுவரை, அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் என்ற விகிதத்தில் DA வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் – அரசின் அதிரடி உத்தரவு!
இதை தொடர்ந்து ஜூலை 1ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் உயர்த்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகை ஜூலை முதல் 38 சதவீதமாக உயரும். இந்த உயர்வு AICPI தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, இம்முறை அரசு 4 சதவீதம் டிஏவை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
முன்னதாக AICPI தரவுகளின்படி, இந்த எண்ணிக்கை ஜனவரியில் 125.1 ஆக இருந்தது. தொடர்ந்து பிப்ரவரியில் 125 ஆக குறைந்தது. ஆனால் மார்ச் மாதத்தில், இந்த எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. இப்போது அடுத்ததாக அறிவிக்கப்பட இருக்கும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் AICPI எண்ணிக்கை 126 ஆக உயர்ந்தால் 4% அகவிலைப்படி உயர்வு என்பது உறுதியாகி விடும். இந்த தொகை அரசு ஊழியர்களின் ஊதியத்திலும் கணிசமான உயர்வை அளிக்க இருக்கிறது. குறிப்பாக, மாதாந்திர அடிப்படையில் ரூ.2,276 வரை சம்பளம் உயர்த்தப்படும்.
அடிப்படை சம்பள கணக்கீடு:
- அடிப்படை சம்பளம் – ரூ 56,900
- தற்போதுள்ள DA (34%) – ரூ. 19,346
- புதிய DA(38%) – ரூ 21,622
- டிஏவில் மாதாந்திர உயர்வு – ரூ.2,276
- சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் – 27,312