தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் லேசான மழையும் அவ்வவ்போது கனமழையும் பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டில் கோடை காலத்தில் பெரியளவில் வெப்பம் இல்லை. அசானி புயல் மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை தான் பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.
அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய விடுமுறை திட்டம் அமல்!
இந்த நிலையில் வரும் 15ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் 16,17-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.