அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய விடுமுறை திட்டம் அமல்!
இலங்கையில் கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு கடுமையான பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது. இந்த பிரச்னைகளில் இருந்து தப்பிப்பதற்காக இலங்கை அரசு அடுத்த வாரத்தில் இருந்து அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை திட்டம் அமலாகும் என அறிவித்துள்ளது.
விசேஷ விடுமுறை திட்டம்
வரலாறு காணாத அளவுக்கு இலங்கை இந்த ஆண்டுதான் படு மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது இந்த பொருளாதார வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல், உணவுப் பொருட்கள், எண்ணெய் என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏற்றம் அடைந்துள்ளது. விலை உயர்வின் காரணமாக மக்கள் அவசியமான பொருட்களை கூட வாங்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிப்பதற்காக இலங்கை அரசு ஒரு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அதாவது இலங்கையில் உள்ள பெட்ரோல், டீசல் முதலான எரிபொருள் நெருக்கடி மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு வழங்கும் வண்ணம் அரசு ஊழியர்களுக்கு அனைத்து வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கும்படி விசேட வேலைத்திட்டம் என்கிற ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் என அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டதால் வேலைக்கு சென்று வரும் ஊழியர்கள் கடுமையான நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டனர்.
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஒரு வாரம் பாடம் கிடையாது!
இந்த சூழலை சமாளிப்பதற்காகவே அரசு இந்த விசேட விடுமுறை என்கிற ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. இலங்கையில் எரிபொருட்கள் மட்டுமல்லாமல் காய்கறிகளின் விலையும் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் விவசாயத்தில் ஈடுபட விரும்பினால் அந்த ஊழியர்களுக்கு அரசு சார்பில் உதவி மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிமுகப்படுத்திய விசேட வேலைத்திட்டம் அடுத்த வாரத்திலிருந்து அமலுக்கு வர உள்ளதாகவும் பொதுநிர்வாக அமைச்சர் அறிவித்துள்ளார்.