தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக நேற்று முதல் பல இடங்களில் மழை அதிகமாக பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் 4 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அதிருப்தி!
மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இது மேலும் 4 நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையை பொறுத்தவரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று சென்னையை சுற்றியுள்ள வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், போரூர், அசோக் நகர் ,வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு நல்ல மழை பெய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் வருகிற 12 ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை மற்றும் டெல்டா மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல் ,குமரி, புதுக்கோட்டை ,சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 11ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.