தமிழகத்தின் 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் இன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து 5ம் தேதி வரையிலான வானிலை நிலவரத்தை பற்றி பார்க்கலாம்.
வானிலை தகவல்
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நேற்று ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. இதனை தொடர்நது தற்போது தென் கேரளாவிலிருந்து வட உள் கர்நாடகா வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
IND vs WI T20 தொடர் – ஈடன் கார்டன் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி! BCCI அறிவிப்பு!
தென் கேரளாவிலிருந்து வட உள் கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக
01.02.2022: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
02.02.2022 முதல் 05.02.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேலையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை