தமிழகத்தில் டிச.24ம் தேதி வரையிலான வானிலை நிலவரம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!
உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இன்றும் நாளையும் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்துல் இன்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களை கடலுக்கு பாதுகாப்பாக செல்லும்படி சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்
20.12.2021 முதல் 24.12.2021 வரை: கடலோர மாவட்டங்களில் காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் தெளிவாகவும் காணப்படும். உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்களில் வானம் தெளிவாக காணப்படும்.
வெப்பநிலை எச்சரிக்கை
20.12.2021, 21.12.2021: உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகை? இன்று முக்கிய ஆலோசனை!
கடலோர மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும்.
ஜன.14 வரை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
20.12.2021: குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்துல் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.