ஜன.14 வரை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு!

0
ஜன.14 வரை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு - அரசு அதிரடி உத்தரவு!
ஜன.14 வரை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு - அரசு அதிரடி உத்தரவு!
ஜன.14 வரை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு!

தற்போது அதிகரித்து வரும் ஓமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நெதர்லாந்து அரசாங்கம் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு நீட்டிப்பு:

முதன்முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான்’ நவ.24 ஆம் தேதி அன்று கண்டறியப்பட்டது. மேலும் டெல்டா வகை வைரஸை விட மிகவும் வேகமாக பரவ கூடியதாக உள்ளது.

தமிழகத்தில் நாளை (டிச.21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அத்துடன் இந்த ஓமைக்ரான் தொற்று பரவல் இஸ்ரேல், அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், நெதர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளுக்கு குறைந்த நாட்களில் வேகமாக பரவி உள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இந்தியாவும் பல்வேறு கட்டுப்பாடு வழிமுறைகளை அறிவித்து வருகிறது. ஓமைக்ரான் வேகமாக பரவி வரும் நாடுகளான பிரான்ஸ், ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கடுமையான ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் கவனத்திற்கு – 60,000 பேருக்கு அனுமதி! கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

மேலும் நெதர்லாந்து நாட்டில் 5வது அலை பரவி வருகிறது. இதனால் அங்குள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது அதிகரித்து வரும் ஓமைக்ரான் பரவல் காரணமாக ஊரடங்கு விதிமுறைகளை வருகிற ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்கும் தடை என்றும் அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!